ஒவ்வொரு தடவையும்
உன்னிலிருந்து விலக எத்தனித்து
நடுவில் ஒன்றை நிறுத்தி
தன்னைத் திரட்டியெடுத்து
தனியே நிற்கிறது மனது..
ஆனாலும் அதையும்
மீறிய ஒன்று அந்த
மனதை உடைத்து சுக்கல்களாக்கி
மீண்டும் உன்னிலேயே
மேலும் மேலுமெனக்
கரைந்தழியச் செய்கிறது....
என்றும்போல் அந்தப் பௌர்ணமி முழுநிலவு என்னுள் ஏக்கங்களை விதைக்க தீராத உன் நினைவுகளுடன் போராடிக்கொண்டு நான்... எதை மறப்பினும் உனை மறவேனென ...
No comments:
Post a Comment