Saturday, September 10, 2022

இதயங்கள் பேசட்டும்

நிலவு தோய்ந்த கடற்கரை 

அதில் 

நிலவிலாடிய இருவர் மட்டும் 

அலை கொண்ட கடலும் 

உள்ளோடிய மூச்சும் மட்டுமே 

உயிர்ப்பை உணர்த்த 

ஆயிரமாயிரம் 

ஆண்டுக காதலின் 

ஏக்கமும் தவிப்பும் தாபமும் 

இரு சிலைகளாய் வரித்துவிட 

உதடுகள் பேசவில்லை 

கண்களும் பேசவில்லை 

இதயங்கள் மட்டும் 

பேசிக்கொண்டே இருந்தன 

இன்னும் ஆயிரமாயிரமாண்டுக்

காதலுக்கும் சேர்த்து…


No comments:

Post a Comment

முழுமை

என்றும்போல் அந்தப் பௌர்ணமி முழுநிலவு  என்னுள் ஏக்கங்களை விதைக்க  தீராத உன் நினைவுகளுடன்  போராடிக்கொண்டு நான்... எதை மறப்பினும் உனை மறவேனென  ...