கண்ணன் வெறும் கதையல்ல
வெறும் கற்பனையும் அல்ல…
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த
வெறும் ஒரு மனிதனுமல்ல
ஆனால் இதிகாச புராணங்களின் நாயகனுமல்ல
கண்ணன் ஒரு நிகழ்வு…
யுகம்தோறும் யுகம்தோறும் நிகழும் நிகழ்வு அவன்
கணம்தோறும் நிகழும் நிகழ்வு கண்ணன்
அவன் நிகழவேண்டுமானால் வேண்டுவது
நம்மில் ஒரு மீராவோ அல்லது ராதையோ..
அது ஆணாயினும் பெண்ணாயினும்
பொருட்டல்ல அவனுக்கு...
ஆண்களில் ராதையே அர்ஜுனன்
அவன் ஒருவனே ஆண்
No comments:
Post a Comment