முகிலிழுத்து முகமறைக்கும்
முழுநிலவுபோல
உன்னிடமிருந்து மட்டுமல்ல
என்னிடமிருந்தே எனை
மறைத்துக்கொள்ள விழைகிறேன்
ஆனாலும் நீ
என்னுள்ளிருந்தே விஸ்வரூபமெடுக்கிறாய்
தோழனென்று கூறியுனை
அயலில் நிறுத்திவிடவே முயல்கிறேன்
அயலானல்லடி நானுனக்கு
உன் ஆத்மாவேதான் என
என் உள்ளிருந்து செல்லமறுத்து
அடம்பிடிக்கிறாய் நீ...
No comments:
Post a Comment