ஓடி ஓடிக் களைத்துச் சோர்ந்துவிடட
குழந்தைபோல் மனமும்
சுருண்டு படுத்துக் கொண்டுவிடவே
துடிக்கிறது
இயல்பாய் சுருண்டுகொள்ளும்
பூனைக்குட்டிபோல் உன் மடியில்...
அன்னையைத் தேடும் குழந்தைபோல்
உனைத் தேடுகிறேனின்று
இன்னோர் குழந்தையாய் எனையுன்
மடிசேர்த்துக் கொள்வாயா
ஆண்டவனே...