உன்னை இனித் தேடேன்
என்னை நீ பார்க்காதே என்றால்
எதிரில் வந்து நின்றுன் புன்னகையால்
எனைக்கொல்வாய்
நீயே எல்லாம் என்று
நானுனைத் தேடிவந்தால்
கண்ணுக்கும் கருத்துக்கும் எட்டாது
ஒளிந்தோடி விடுவாய்
என்னை முழுவதுமாய் புரிந்து கொண்டவன்
நீதான் ஆனாலும் என்னால்
உன்னைப் புரிந்துகொள்ளவே முடியவில்லையே
என்னால் என்னையே
புரிந்துகொள்ள முடியாதபோது
உன்னைப் புரிந்துகொள்வது
எவ்வாறு......???
No comments:
Post a Comment