என்னுள்ளே உருவான நேசமொன்று
பூத்துக் குலுங்கி
மணம்பரப்பிய வேளையில்....
அந்தப் பூங்காட்டில் நுழைந்து எனைப்
பூப்போலக் கொய்தான் ஒருவன்...
எங்கும் இளகாத என்மனதும் உருகி
நான் அவனிடம் இழைந்த வேளையில்
என்னுள்ளே அதிசயித்து ...
எவருக்கும் இளகாது
கல் போலிருந்த என்மனதை
பூப்போலாக்கி சூட்டிக் கொண்டாயே
"யாரடா நீ" என்றேன்
மெல்லச் சிரித்து......
"அவனே நான்" என்றென்னைத்
தனதாக்கிக் கொண்டான்...
அந்தக் குறும்புப் புன்னகையில்
அவனுள் நான் தொலைந்து போனேன்.....
No comments:
Post a Comment