உனைக் கண்டதும்
இதயம் பொங்கிக் கண்ணீராய் வழிய
ஒருகணம் உறைந்துபோய்
உன்னில் நான் வேறல்ல
உன் அன்பின் சிறுதுளி நானென்றுணர்வது
வெறும் கற்பனையென்றாகுமா என்
இதயக்கமலவாசனே…
உன்னுள் நிறைந்த அன்பே
உன் அழகாகப் பொலிகிறதோ…
வார்த்தைகளின்றி
தொலைந்துபோய்விடடேன்
எனை மீடடெடுக்க
என்னால் முடியவில்லை
ஒவ்வொரு முறையும்
தவணைமுறையில் எனைத்
தொலைப்பதுதான் என் சாபமா..
ஆனாலும் இதிலிருந்து
வேண்டேன் ஒருபோதும்
சாபவிமோசனம்…